நடிகைகளை மிஞ்சிய அபிராமியின் டப்ஸ்மேஷ்... குஜாலாக இருந்த வீடியோ ரிலீஸ்!

Sep 5, 2018, 10:53 AM IST

பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது இரண்டுக் குழந்தைகளையும்  பாலில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு தனது கள்ளக் காதலனுடன் வாழ கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை  அமைத்து நாகர் கோவிலில் கள்ளக் காதலனின் உதவியுடன் கைது செய்தனர். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் அபிராமி கைதானார். உடனடியாக, அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், அபிராமி ஜெயிலில் களி தின்றுகொண்டிருக்கும் வேலையில் கடந்த சில மாதங்களாக அவர் ஜாலியாக டப்ஸ்மேஷ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அபிராமி குஜாலாக கூத்தடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. அதில், கையில் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.