
இந்த நிலையில் இருதரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் இருதரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து விழா நடத்துவது என விஜய் ரசிகர்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் ரசிகர்கள் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 6000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருந்து வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.