
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமமுக சார்பில் உழைப்பாளர் தின பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: அமமுக கட்சி எப்போதும் யாரிடமும் மண்டியிடாமல், சமரசம் செய்யாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம். நான் அமைதியானவன், பொறுமையானவன் தான். அதே நேரத்தில் அழுத்தமானவன். அமமுகவின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன் .