செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி, “நேற்று போலீசார் வருவதாகக் கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனைக் கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். ஆனால், என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம்? வெளியே வந்து அதனைப் படிக்க எனக்கு சங்கட்டமாக இருந்ததால், போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும். வீட்டுப் பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை, போலீசார் திட்டமிட்டே அவரைக் கைது செய்துள்ளனர்என்று கூறினார்.