
காஞ்சிபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் வேண்டுமானாலும் ஆரம்பித்து இருக்கலாம். ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் பிரதமர் மோடி, அமித்ஷாவை பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.