Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Ansgar R |  
Published : May 21, 2024, 11:50 PM IST

Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் கடந்த 8ம் தேதி  தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக இதில் தொடர்புடைய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர்சாதிக் என்பது தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை ஆட்டோ மூலம் விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது தனிப்படை போலீசாரிடம் கையும் களவுமாக அவர் சிக்கினார். 

மேலும் அவரிடமிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் தப்பி செல்ல முயன்ற ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நாகூர் காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. சிசிடிவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை 2 வாரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

03:59பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
05:27டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
03:24வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!
03:07கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
03:56அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
05:04உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.
05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
02:52கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
03:49தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
07:22ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி
Read more