Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Ansgar R |  
Published : May 21, 2024, 11:50 PM IST

Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் கடந்த 8ம் தேதி  தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக இதில் தொடர்புடைய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர்சாதிக் என்பது தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை ஆட்டோ மூலம் விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது தனிப்படை போலீசாரிடம் கையும் களவுமாக அவர் சிக்கினார். 

மேலும் அவரிடமிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் தப்பி செல்ல முயன்ற ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நாகூர் காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. சிசிடிவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை 2 வாரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

02:18TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
Read more