Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!

Ansgar R |  
Published : May 21, 2024, 11:50 PM IST

Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் கடந்த 8ம் தேதி  தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக இதில் தொடர்புடைய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர்சாதிக் என்பது தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை ஆட்டோ மூலம் விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது தனிப்படை போலீசாரிடம் கையும் களவுமாக அவர் சிக்கினார். 

மேலும் அவரிடமிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் தப்பி செல்ல முயன்ற ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நாகூர் காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. சிசிடிவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை 2 வாரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
Read more