முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!

Ansgar R |  
Published : Oct 14, 2024, 07:24 PM IST

CM Stalin : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே துவங்கியிருக்கிறது. இந்நிலையில் சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் சென்னையில் வெள்ளம் சூழ்வது என்பது இயல்பான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் வரும் வடகிழக்கு பருவமழை, நாளை அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் துவங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில் கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருந்து வருகிறது. 

இது குறித்த அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் "நாளை 15ம் தேதி சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும், வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையில் திறன் கொண்ட அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை வியாபாரிகள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட பலரும் கவனத்துடன் செயல்படுமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தியுள்ளார். 

03:59பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
05:27டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
03:24வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!
03:07கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
03:56அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
05:04உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.
05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
02:52கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
03:49தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
07:22ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி