
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா. வேலு பேசுகையில் சமய நல்லிணக்கம் என்பது புத்தகத்தில் எழுதப்படும் வாசகம் மட்டுமல்ல…நாம் தினசரி மனித வாழ்க்கையிலேயே கடைப்பிடிக்க வேண்டியது தான்.வீட்டிலே தொடங்கட்டும்…பள்ளியில் தொடரட்டும்…கோவில் வாசல்களில் ஒன்றுபடட்டும்…மசூதி வாசல்களில் புரிந்துகொள்ளட்டும்…தேவாலய வாசல்களிலும் நாம் ஒன்றுபட வேண்டும்.என்று பேசினார் .