Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Ansgar R |  
Published : Mar 30, 2024, 07:22 PM IST

Premalatha Election Campaign : மக்களவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி தலைவி பிரேமலதா, கூட்டணி கட்சியான அதிமுகவின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஓசூரில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓசூர் ராம்நகர் பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே அவர் பேசினார். அப்போது பேசிய அவர்,

ஏடிஎம்கே என்பது நான்கு எழுத்து டிஎம்டிகே என்பது நான்கு எழுத்து கூட்டணி என்பது நான்கு எழுத்து, நாற்பதும் நமதே என்று பேசிய அவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பட்டதாரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கும், கஞ்சா விற்பனையும், போதை தமிழகமாக மாற்றி இருக்கிறது. ஆளும் திமுக அரசு, ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்து மத்திய அரசு அனைவருக்கும் மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பபெற செய்ய வேண்டும், இங்கே இருக்கக்கூடிய சிறு சிறு தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரும் ஜிஎஸ்டியால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி, இருண்ட தமிழகம் மக்களுக்கான தமிழகமாக மாற்றியே தீருவோம் என்று உறுதியாக கூறி கொள்கிறேன் என தெரிவித்தார்.

05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்