Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Ansgar R |  
Published : Mar 30, 2024, 07:22 PM IST

Premalatha Election Campaign : மக்களவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி தலைவி பிரேமலதா, கூட்டணி கட்சியான அதிமுகவின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஓசூரில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓசூர் ராம்நகர் பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே அவர் பேசினார். அப்போது பேசிய அவர்,

ஏடிஎம்கே என்பது நான்கு எழுத்து டிஎம்டிகே என்பது நான்கு எழுத்து கூட்டணி என்பது நான்கு எழுத்து, நாற்பதும் நமதே என்று பேசிய அவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பட்டதாரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கும், கஞ்சா விற்பனையும், போதை தமிழகமாக மாற்றி இருக்கிறது. ஆளும் திமுக அரசு, ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்து மத்திய அரசு அனைவருக்கும் மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பபெற செய்ய வேண்டும், இங்கே இருக்கக்கூடிய சிறு சிறு தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரும் ஜிஎஸ்டியால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி, இருண்ட தமிழகம் மக்களுக்கான தமிழகமாக மாற்றியே தீருவோம் என்று உறுதியாக கூறி கொள்கிறேன் என தெரிவித்தார்.

06:38மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்
03:24தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !
08:50வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது! கொள்கைக்கு எதிரானவைகளை அரசு எதிர்க்கும் - முதல்வர் விஜய் பேச்சு
03:23திருமண நிதி 2 மடங்கு உயர்வு.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் 5 முக்கிய அறிவிப்புகள் !
04:30சுதந்திர தின விழா முடிந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. டாடா காட்டிய த்ரிஷா மற்றும் பெற்றோர் !
03:41நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒற்றுமை வந்துவிடும்- முதலமைச்சர் விஜய் பேச்சு
10:54சுதந்திர தின விழா: புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!
04:18ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
04:49ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி
03:22மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!