Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Ansgar R |  
Published : Mar 30, 2024, 07:22 PM IST

Premalatha Election Campaign : மக்களவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி தலைவி பிரேமலதா, கூட்டணி கட்சியான அதிமுகவின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஓசூரில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓசூர் ராம்நகர் பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே அவர் பேசினார். அப்போது பேசிய அவர்,

ஏடிஎம்கே என்பது நான்கு எழுத்து டிஎம்டிகே என்பது நான்கு எழுத்து கூட்டணி என்பது நான்கு எழுத்து, நாற்பதும் நமதே என்று பேசிய அவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பட்டதாரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கும், கஞ்சா விற்பனையும், போதை தமிழகமாக மாற்றி இருக்கிறது. ஆளும் திமுக அரசு, ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்து மத்திய அரசு அனைவருக்கும் மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பபெற செய்ய வேண்டும், இங்கே இருக்கக்கூடிய சிறு சிறு தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரும் ஜிஎஸ்டியால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி, இருண்ட தமிழகம் மக்களுக்கான தமிழகமாக மாற்றியே தீருவோம் என்று உறுதியாக கூறி கொள்கிறேன் என தெரிவித்தார்.

05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!
05:23தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
02:28கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு மரியாதை : தவெக அமைச்சர்கள் திரண்டு நடன கலைகளுடன் மரியாதை !
03:56ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !