Video: மயிலாடுதுறையில் யானைக்கு பொன்விழா கொண்டாடிய கோவில் நிர்வாகிகள்

Video: மயிலாடுதுறையில் யானைக்கு பொன்விழா கொண்டாடிய கோவில் நிர்வாகிகள்

Published : Jan 09, 2023, 11:38 AM IST

மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி திருக்கோவில் முன்னவராக அழைக்கப்படும் அபயாம்பிகை யானை கோவிலுக்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அபயாம்பிகை யானைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொன் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பாள். கடந்த அரை நூற்றாண்டாக மாயூரநாதர் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் முன்னவராக யானை அபயாம்பாள் செல்ல விழா சிறக்கும். யானை அபயாம்பாள் கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு பொன்விழா நடத்தப்பட்டது. இது அதன்படி காலை யானைக்கு கலசபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், இரவு பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. வழியெங்கும் வணிகர்கள் பழங்கள், காய்கறிகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை அபயாம்பிகை யானைக்கு கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

03:03ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
03:26ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!
03:04Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
04:23சட்டென மாறிய கூட்டணி.! விஜய் பக்கம் சாய்ந்த காங்கிரஸ் ! | விஜய் - காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
03:08TVK | 5 + 6 சந்தேகம்....எம்ஜிஆர் வழியில் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. மே 7ல் சர்ப்ரைஸ் !
02:10TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!
02:15பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
03:08விஜய்யின் வரலாற்று வெற்றி ! - த.வெ.க தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு!
05:35"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!
03:15முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி