முதலை வடிவில் ராட்சத உடும்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வீடியோ உள்ளே..

முதலை வடிவில் ராட்சத உடும்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வீடியோ உள்ளே..

Published : Oct 15, 2022, 10:44 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலை வடிவில் இருந்த ராட்சத உடும்பை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அங்கிருந்து காட்டிற்குள் சென்றது.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட கழக பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு அருகே வனப்பகுதி மற்றும் பெரிய நீரோடை உள்ளது.

இந்நிலையில் இன்று குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததாக தகவல் பரவிய நிலையில், மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி சாலைக்கு வந்தனர். ஆனால் வனப்பகுதி சாலையோரம் முதலை வடிவில் பெரிய உடும்பு இருந்தது. இதனை கண்டு கிராம மக்கள், வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க:விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!

மேலும் அப்பகுதி இளைஞர் முதலை வடிவில் இருந்த ராட்சத உடும்பை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே, பெரிய உடும்பு காட்டிற்குள் சென்றது. இது சுமார் 30 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

03:04நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
04:51இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்