செங்கோட்டையன் கூட்டத்தில் மோதல் ! நாற்காலிகளை வீசி தாக்குதல்.. பரபரப்பில் கோபிசெட்டிபாளையம் !

Published : Mar 05, 2025, 09:00 PM IST

ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பூத் கமிட்டி அமைப்பு மற்றும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, கே.ஏ.செங்கோட்டையன் பேசத் தொடங்கியபோது,"அந்தியூரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் எழுந்து, அந்தியூர் பகுதி அதிமுக நிர்வாகிகளை அழைக்காமல் கூட்டம் நடத்துவதாக சப்தம் போட்டார். இதனால், தனது பேச்சை நிறுத்திய செங்கோட்டையன் பிரவீனை மேடைக்கு அழைத்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், பிரவீன் செங்கோட்டையனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை தாக்கி மேடையில் இருந்து இறக்கிவிட்டனர்.தொடர்ந்து, நாற்காலிகளை பிரவீன் மற்றும் அவருடன் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு பிரவீனுடன் வந்திருந்தவர்களும் நாற்காலியைத் தூக்கி வீசினர். இதனால், செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
Read more