வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், நாளை புதுச்சேரி பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஃபெங்கல் புயல் நாளை பிற்பகலில் ஒரு சூறாவளி புயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.