Watch : உதகை நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

Aug 9, 2022, 4:47 PM IST

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் உதகையிலிருந்து உல்லத்தி , கவரட்டி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரத்தில் ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துவங்கப்பட்டது.