இந்த சூழலில் "ஐ அம் சாரி ஐயப்பா.. கோவிலுக்குள் பெண்கள் வந்தால் தப்பா" என்ற வரிகள் அமைக்கப்பட்ட பாடல் ஒன்று இந்த கேஸ்டெல்ஸ் கலெக்ஷன்ஸ் குழுவால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டது. இந்த பாடலின் முக்கிய பாடகியாக திகழ்ந்தவர் இசைவாணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பாடலை அவர் பாடிய பொழுது கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு பாடியதால் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் இசைவாணி இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக கூறி அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டது. பா. ரஞ்சித் மீதும் இந்த விஷயம் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் பிரபல இயக்குனர் மோகன் ஜி, இசைவாணியை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.