கார்த்திகைக்காக வீட்டு வாசலில் ஏற்றப்பட்ட விளக்கு; பைக், கார் எரிந்து நாசம்

கார்த்திகைக்காக வீட்டு வாசலில் ஏற்றப்பட்ட விளக்கு; பைக், கார் எரிந்து நாசம்

Published : Nov 27, 2023, 05:44 PM IST

கோவில்பட்டியில் கார்த்திகை தீபத்திற்காக வீட்டு வாசலில் விளக்கு ஏற்றப்பட்ட நிலையில், நெருப்பு பட்டு கார், பைக் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருப்பதி காலனியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் தீபன் ராஜ். இவர்  எட்டையாபுரத்தில் தீப்பெட்டி ஆலை வைத்துள்ளார். கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அவரது வீட்டின் வாசலில் தீபம் ஏற்றி வைத்துள்ளனர். தீபம் ஏற்றிய சில நிமிடங்களில் அதிகமாக காற்றாடித்துள்ளது. இதன் பின்னர் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து நெருப்பு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் பைக் மீது பட்டுள்ளது. 

இதனால்  கார் மற்றும் பைக்கில் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து தீபன் ராஜ் குடும்பத்தினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்கும் வகையில் தடுத்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் மற்றும் பைக் முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தீபத்தில் இருந்து தீ பரவி கார் மற்றும் பைக் எரிந்து சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more