பள்ளி விழாவில் தனது நண்பனை நினைவுகூர்ந்து தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பள்ளி விழாவில் தனது நண்பனை நினைவுகூர்ந்து தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published : Jan 31, 2024, 11:33 AM IST

கோவில்பட்டி அருகே பள்ளி ஆண்டு விழாவில் தனது நண்பரை நினைத்து கண்ணீர் விட்டு அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் உள்ள இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு  மறைந்த இந்து நாடார்கள் உறவின்முறை முன்னாள் பொதுச் செயலாளர் காளிராஜன் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். காளிராஜன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் மறைந்த அவருடைய நண்பர் காளிராஜன் பற்றியும், இருவருக்குள் இருந்த நட்பினை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது திடீரென தனது நண்பரை நினைத்து தேம்பி, தேம்பி கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் முன்னாள் அமைச்சரை ஆறுதல் படுத்தினர். இருந்தபோதிலும் தனது நண்பரை பற்றி பேசி முடிக்கும் வரை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்களில் கண்ணீர் துளிகள் நிற்கவில்லை வந்து கொண்டே இருந்தது.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more