முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்

முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்

Published : Jan 30, 2024, 07:42 PM IST

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளை கண்டித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இன்று காலை முதல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பொழுது மருத்துவமனை முழுவதும் கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக சட்டமன்ற குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் மேலாளரிடம் ஏன் கழிவுநீரை அகற்றவில்லை? மருத்துவமனையை தூய்மையாக வைக்கவில்லை? தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இதே போன்ற நிலையா என கோபத்துடன் சட்டமன்ற குழு தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினர். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் வேலை செய்யவில்லை அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் சரி செய்து விட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சட்டமன்ற குழு உறுப்பினர்கள் புறப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி