மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்

மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்

Published : Jan 14, 2024, 06:52 AM IST

மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பெண்கள் காளை காளைமாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை ஓட்டி சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர் திருநாளை சிறப்பிக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வகை வேறுபாடுகளை கடந்து மாணவிகள் தாவணி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி கூறும் வகையில் சூரிய பகவானை வழிபட்டு காளை மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் உறியடித்தல், பல்லாங்குழி, தாயம், பாண்டி, கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்று மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக இயற்கை ஆர்வலர் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலுவிற்கு பசுமை நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் கூடி கும்மியடித்து நாட்டுப்புற பாடல்களை பாடி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை மாணவிகள் ஓட்டிச் சென்று கல்லூரியை வளம் வந்தனர். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி