புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை

புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை

Published : Dec 06, 2023, 11:49 AM IST

மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மக்கள் விரைவில் நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் 301 பெண்கள் விளக்கு பூஜை நடத்தி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஐயப்பன் கோவிலில் 19வது ஆண்டு ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. தினம் தினம் நடைபெறும் இந்த பூஜையில் நேற்றைய தினம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் விரைவில் மீண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பு விளக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பூஜையில் 301 பெண்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more