நிறைவு பெற்ற தைப்பூச திருவிழா; பழனியில் உண்டியல் காணிக்கையாக 20 நாட்களில் ரூ.3.4 கோடி வசூல்

Feb 1, 2024, 6:47 PM IST

பழனி முருகன் கோயிலில் தைப்பூச  திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் வருகை கூடுதலாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை வகை பிரித்து எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 840 ரூபாயும் (ரூ.3,04,89,840), வெளிநாட்டு கரன்சி  631 நோட்டுகளும், தங்கமாக 221 கிராமும், வெள்ளியாக  9326 கிராமும் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.