Watch : பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை! மக்கள் பீதி!

Watch : பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை! மக்கள் பீதி!

Published : May 08, 2023, 05:12 PM IST

பழனி அருகே கோம்பைபட்டி பகுதியில் சுற்றி வரும் ஒற்றைக்காட்டு யானை காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் மான், சிறுத்தை, வரையாடு, காட்டு யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்டவை வசித்து வருகின்றன. இவைகள் அவ்வபோது ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆயக்குடி, சட்டபாறை, கோம்பைபட்டி, ராம்பட்டிணம் பதூர் சத்திரபட்டி, புதுக்கோட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்திரப்பட்டி அருகே புதுக்கோட்டையில் விவசாயி ஒருவரை மிதித்துக் கொன்ற யானை, அடுத்த சில நாட்களில் மற்றொரு விவசாயியையும் துரத்தி மிதித்து கொன்றது. இந்நிலையில் பகல் நேரத்திலேயே விவசாயிகள் தோட்டங்களில் சாதாரணமாக உலா வரும் காட்டுயாணை காட்சிகள் விவசாயிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இது குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, வனதுறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..