சேலம் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேலம் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published : Mar 10, 2023, 11:16 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செய்து வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 17 நாட்களாக மாரியம்மன் சுவாமி தினந்தோறும் பல்வேறு அவதாரங்களில் வீதி உலா வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு கவுண்டம்பட்டி பகுதி முழுவதும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் வந்தனர். மாவிளக்கு தட்டில் உள்ள தேங்காய்களை எடுத்து ஊர்வலத்தின் போதே பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.

நிறைவேறாத செயல்களை மனதில் நினைத்துக்கொண்டு தலையில் தேங்காய் உடைத்தால், வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more