
பெண் ஒருவர் வாட்ஸ்அப் செய்தி வலையில் சிக்கி ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்ச்ஷீல் ஹைனிஷ் சொசைட்டியில் வசிக்கும் ஒருவர் வாட்ஸ்அப் செய்தி வலையில் சிக்கி ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்தார். யூடியூப் (YouTube) வீடியோக்களை பார்த்தாலே சம்பாதிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படியொரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது.
யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டும், லைக் செய்ய வேண்டும், சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்றும், இதை செய்து வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று விளம்பர ஒன்று சம்பந்தப்பட்ட பெண் ஆன கார்த்திகா என்பவருக்கு வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. எளிமையான வேலையாகத் தோன்றியதால், கார்த்திகா டெலிகிராம் அவர்களை தொடர்பு கொண்டார். அங்கு அவர்கள் தினசரி ரூ. 50 முதல் ரூ. 5,000 வரை வருமானம் தருவதாக உறுதியளித்தனர்.
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ
ஆரம்பத்தில், யூடியூப்பில் வீடியோக்களை லைக் செய்து சந்தா செலுத்தியதற்காக, மோசடி செய்பவர்கள் கார்த்திகாவின் கணக்கில் ரூ.150 செலுத்தினர். இதனால் உற்சாகமடைந்த அவர், தொடர்ந்து பணிகளைத் தொடர்ந்தார். பின்னர் அதிக வருமானம் தருவதாக கூறி போலி நாஸ்டாக் இணையதளத்தில் முதலீடு செய்யும்படி அவரை வற்புறுத்தினார்கள். 2,000 ரூபாய் முதலீடு செய்த பின்னர், மோசடி செய்பவர்கள் அதே நாளில் 3,150 ரூபாயை லாபமாக திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மோசடி செய்பவர்கள் கார்த்திகாவை பல கட்டாயப் பணிகளின் மூலம் தொடர்ந்து கவர்ந்திழுத்து, பெரிய தொகையை (ரூ. 5,000, ரூ. 30,000 மற்றும் ரூ. 90,000) அனுப்ப வழிவகுத்தனர். கார்த்திகா தனது முதலீடுகளில் வருமானம் இல்லாததைக் கேள்விக்குட்படுத்தியபோது, மோசடி செய்பவர்கள் அவர் மூன்றாவது பணியில் தோல்வியடைந்ததாகக் கூறி புதிய பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
இந்த பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் கார்த்திகா தனது பணத்தை திரும்ப வரம் நம்பிக்கையில் பணத்தை அனுப்பினார். இதனால் கார்த்திகாவும், அவரது கணவரும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தனர், இறுதியில் அதிக கடன்களை குவித்தனர். மோசடி செய்பவர்கள் இன்னும் கூடுதலான பணத்தைக் கேட்டனர், பணம் பெறுவதற்கு ரூ.15 லட்சம் வரம்பை அழிக்க வேண்டும் என்று கூறினர்.
தங்களுடைய பொருளாதார நல்வாழ்வுக்கு பயந்து, கார்த்திகாவும் அவரது கணவரும் மோசடிக்கு ஆளாகக்கூடும் என்பதை உணர்ந்த பிறகும் பணம் செலுத்துவதைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில், வரித் தொகையாக ரூ.5,20,000 கூடுதலாகக் கேட்டுள்ளனர் மோசடியாளர்கள். அப்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்ட தம்பதியினர், போலீசில் புகார் செய்ய முடிவு செய்தனர். இருப்பினும், போலி நாஸ்டாக் இணையதளத்தில் இருந்து பணம் எடுக்க முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப (திருத்தங்கள்) சட்டம், 2008 இன் பிரிவு 66D இன் கீழ், அறியப்படாத குற்றவாளிகளுக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் நபர்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஆன்லைன் சலுகைகள் மற்றும் கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
நண்பேன்டா.. பீச்சில் ஜாலியாக விளையாடும் எலான் மஸ்க் & மார்க் ஜுக்கர்பெர்க் - AI-யின் கூல் போட்டோஸ்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.