முடிவுக்கு வரும் Work From Home : முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை..

By Ramya sFirst Published May 25, 2023, 6:27 PM IST
Highlights

படிப்படியாக, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்ததும், மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறைக்கு மாறின.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மாறின. வீட்டிலிருந்து வேலை செய்யும் போது 9:15 மணிக்கு மீட்டிங் இருக்கும் போது 9:00 மணிக்கு எழுந்திருப்பது பல ஊழியர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்டது.

படிப்படியாக, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்ததும், மீண்டும் பல நிறுவனங்கள் அலுவலகத்திற்உ வந்து வேலை செய்யும் முறைக்கு மாறின. எனவே  ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூகுளின் சுந்தர் பிச்சை, மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசானின் ஆண்டி ஜாஸ்ஸி மற்றும் பலர் போன்ற முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்தனர்.

Open AI சிஇஓ சாம் ஆல்ட்மேன், இதுகுறித்து பேசிய போது, 'வொர்க் ஃப்ரம் ஹோம் எக்ஸ்பெரிமென்ட்' முடிந்துவிட்டதாகவும், அவசர அவசரமாக வீட்டிலிருந்து நிரந்தர வேலை என்று அறிவித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் 'பெரிய தவறு' செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். பல நிறுவனங்கள் இப்போது அலுவலகங்களில் இருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கி வருவதால், சிறந்த தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர்.

கூகுள்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து, வாரத்தில் சில நாட்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் 'ஹைப்ரிட்' பணி மாதிரியை பின்பற்றுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, கூகுள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 200 ஒப்பந்தத் தொழிலாளர்கள்,  'பயணம் செய்ய முடியாததால்' வீட்டிலிருந்து வேலையைத் தொடர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமேசான்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, வலைப்பதிவு இடுகையில் அலுவலகங்களில் இருந்து வேலை செய்வதன் நன்மைகளை குறிப்பிட்டுள்ளார். அதே இடுகையில், அமேசான் ஊழியர்கள் மே 2023 முதல் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவித்தார். அமேசான் நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மற்றும் ஊழியர்கள் இப்போது நிறுவனத்தின் வேலை-அலுவலக ஆணை மற்றும் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். எதிர்ப்பின் அடையாளமாக மே 31 அன்று அமேசான் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு திரும்பும் கொள்கை மற்றும் பணிநீக்கங்கள் குறித்து ஊழியர்கள் விரக்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மெட்டா

பேஸ்புக் நிறுவனமான மெட்டா நிறுவனமும் ஊழியர்களை அலுவலகங்களில் வந்து வேலை செய்ய சொல்லத் திட்டமிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த சந்திப்பின் போது, நிறுவனம் வீட்டில் இருந்து வேலையை முழுமையாக அகற்றாது, ஆனால் 'நிலைமைகள் மேம்படவில்லை' என்றால் மாற்று வழிகளை ஆராயும் என்று கூறினார். மேலும் “ நாங்கள் சில தரவுப் புள்ளிகளைப் பெறத் தொடங்குகிறோம், நாங்கள் அங்கு இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்," என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ட்விட்டர் ஊழியர்களுக்கான வீட்டில் இருந்து வேலை செய்யும் விருப்பத்தை எலான் மஸ்க் நீக்கினார். சமீபத்தில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு நேர்காணலின் போது வீட்டிலிருந்து வேலை செய்வதை விமர்சித்து அதை 'தார்மீக ரீதியாக தவறு' என்று கூறினார்.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகங்களில் இருந்து வேலை செய்வதைக் கட்டாயமாக்கியதை அடுத்து, கடந்த ஆண்டு தனது வேலையை விட்டு விலகியதற்காக ஆப்பிள் ஊழியர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஆப்பிள் நிறுவனத்தில் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்குப் பொறுப்பான இயன் குட்ஃபெலோ, தனது ராஜினாமாவை அளித்து, நிறுவனத்தில் 'நெகிழ்வான பணிச் சூழல் மற்றும் கொள்கைகள்' இல்லை என்று கூறினார். அவர் தனது வேலையை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, குட்ஃபெலோ கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆப்பிள் நிறுவனத்தில் பணியிலிருந்து ரிமோட் முடிவடைவதாக அறிவித்தது.

டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) செப்டம்பர் 2022 இல் தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் விருப்பத்தை நீக்கியது. ஊழியர்கள் குறைந்தபட்சம் 'வாரத்தில் மூன்று நாட்கள்' அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

click me!