அதிகாலை 2 மணிக்கு வீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழித்த வாலிபர்... சிசிடிவி பதிவு வைத்து சோதனை?

First Published May 23, 2018, 2:48 PM IST
Highlights
young girl raped CCTV recorded


அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்த இளம் பெண்ணை கத்திமுனையில் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி புதுநகரில் சிந்துஜா தனியார் நிறுவன அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். திருமண மாகாத இவர் தற்போது இவர் தனியாக அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு சிந்துஜா எழுந்து வந்து கதவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி முனையில் அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, சிந்துஜா போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்துஜா வீட்டின் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சின்ன பெண்ணை, கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் தற்போது இளம்பெண்ணையும் கற்பழித்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

click me!