'சர்கார்' படத்தால் அரங்கேறிய கோரசம்பவம்! பரிதாபமாக இறந்த கல்லூரி மாணவர்கள்!

By manimegalai aFirst Published Nov 8, 2018, 1:30 PM IST
Highlights

விஜய் ரசிகர்கள் இருவர் சர்கார் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது...  2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர்கள் இருவர் சர்கார் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது...  2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் தினேஷ்குமார். கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவருடைய மகன் சித்திக் 18 . இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர்கள் இருவரும் தீவிர விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று வெளியான விஜய்யின் சர்கார் படத்தை பார்த்துள்ளனர்.

காலை 6 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை பார்த்து விட்டு. 9 .45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்.

இவர்கள் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் மாதேஷ்வரன் கோவில் பகுதியில் சென்றபோது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்... எதிரே வந்த லாரியின் மேல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த தினேஷ் மற்றும் சித்திக் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் இறந்த இரண்டு மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகிறார்கள்.

மருத்துவமணியில் வைத்திருந்த மாணவர்கள் தினேஷ் குமார், சித்திக்கின் உடல்களை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.  

click me!