
தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பட்டு வேட்டி, சட்டையுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றிவேல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.