
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த சில வாரங்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமரும் கனவோடு இருக்கிறார் விஜய். திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.