தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..

Published : Sep 29, 2022, 05:18 PM ISTUpdated : Sep 29, 2022, 05:20 PM IST
தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..

சுருக்கம்

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.  

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம்( TNPSC ) அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க:லஞ்சமாக 20 ஆயிரம் கேட்ட உதவி பொறியாளர்.. ? வித்தியாசமான போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

கடந்த ஜூலை 24 ஆம் தேதி 7,138 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4  தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஹீரோயிசத்திற்காக வௌவால்களாக மாறும் புள்ளிங்கோ இளைஞர்கள்: பயணிகள் அச்சம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 08 December 2025: 3500 ஆண்டுகள் பழமை.. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்