தமிழக அரசின் ரூ.3000 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்

By Velmurugan sFirst Published Feb 3, 2023, 10:23 AM IST
Highlights

தமிழ்நாடு அரசு ரூபாய் 3000  கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் வருகின்ற 7ம் தேதி விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு ரூபாய் 3000  கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்ரவரி 07,  2023 அன்று நடத்தப்படும். 

போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும்  இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber)System] மின்னணு படிவத்தில் (Electronic format)  பிப்ரவரி 07,  2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

click me!