சும்மா 4 நாளு நச்சு, நச்சுன்னு வெளுத்து கட்டும் மழை…! சென்னை வானிலை மையம்

By manimegalai aFirst Published Oct 8, 2021, 8:45 AM IST
Highlights

4 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சென்னை: 4 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த பல நாட்களாக தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது. இந் நிலையில் டெல்டா மற்றும் வட மாவட்டங்கள், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கிளில் இடி மின்னலுடன் மழை கொண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது: தென்தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டும். வரும் 9ம் தேதி வட மாவட்டங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும் கொட்டும்.

10ம் தேதி, 11ம் தேதிகளில் உள்மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!