எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பயப்படலாம் ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் எந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக்குகின்ற எண்ணம் அமிஷாவிற்கு நிச்சயமாக கிடையாது. பீகாரில் பார்த்திருப்பீர்கள். பத்து தடவை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை ஏமாற்றியுள்ளார்கள். அமித்ஷா உடைய நோக்கம் அதிமுகவை எப்படியாவது அபகரித்து விடலாம் என்ற எண்ணம் தான். அதிமுக அடிமை அதிமுகவாக மாறியுள்ளது இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டெல்லிகிட்ட அடகு வைக்க பார்க்கிறார்கள். அந்த டெல்லி அணியை எதிர்த்து தான் நமது தலைவர் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக தலைவர் தலைமையில் தமிழ்நாடு அணி களத்தில் நிற்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அணியை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள்.