#Breaking : Tamilnadu Rain : கொட்டித்தீர்க்கும் கனமழை… 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 6:46 PM IST
Highlights

கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இன்று மழை தீவிரமாகும் என ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

நேற்று பெய்த மழையினால் ஏற்பட்ட செதங்களில் இருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் மழை பெய்துள்ளது அப்பகுதி மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் கனமழை தொடரும் என்பதால் நாகை, அரியலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

click me!