
TVK தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், இன்று காலை சுமார் 7 மணியளவில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து திருத்தணி முருகன் கோவில் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வெற்றிக்காக முருகன் அருளை வேண்டினார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முக்கிய தருணத்தில், இந்த தரிசனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆன்மீக ஆதரவாக இது பார்க்கப்படுகிறது.