
வேலூர் மாவட்டம் காட்பாடியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநதியின் நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கருணாநிதியின் ஆட்சி சாதனைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்து விரிவாக உரையாற்றினார். மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.