தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சம்…. கலங்கும் வாகன ஓட்டிகள்

By manimegalai aFirst Published Oct 21, 2021, 7:47 AM IST
Highlights

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது பல மாநிலங்களில் ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்துவிட்டது.

நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் விலை அறிவிப்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்று பெட்ரோல், டீசலை படு உச்சத்தில் இருக்கிறது. விலை உயர்வு அறிவிப்பு வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ. 103.61 ஆக உள்ளது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.99.56 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கத்திலும், கடுப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

 

click me!