ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..! சட்ட பேரவையில் நிறைவேறிய மசோதா..! தடையை மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?

Published : Oct 19, 2022, 12:08 PM ISTUpdated : Oct 19, 2022, 12:18 PM IST
 ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..! சட்ட பேரவையில் நிறைவேறிய மசோதா..! தடையை மீறினால் என்ன  தண்டனை தெரியுமா..?

சுருக்கம்

ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை

ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் ஆகிய ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி  இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்ட பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள  அம்சங்கள் பொறுத்தவரை,  2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது.

ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் முதல்வர்.. அவருடன் அரை மணிநேரம் ஸ்டாலின் ரகசிய பேச்சு.. போட்டு தாக்கும் இபிஎஸ்.!

தண்டனைகள் என்ன தெரியுமா..?

அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களிடையே சுயமரியாதை குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் 77 சதவீதம் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.மேலும் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், மொத்தம் 10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

இந்திக்காரர்கள் மட்டும்தான் நாட்டின் குடிமக்களா? இந்திய நாடா..? இந்தியின் நாடா? பாஜகவிற்கு எதிராக சீறிய சீமான்

ஆணையத்திற்கு அதிகாரிகள் நியமனம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

கட்டுப்பாடுகள் என்ன

மேலும், பணம்  வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன.எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

எந்த இந்தியால் ஆட்சிக்கு வந்தீர்களோ அதே இந்தியால் ஆட்சி வீழப்போகிறது.. ஸ்டாலின் அரசை சபித்த அண்ணாமலை.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!