மிக்ஜாம் புயல் : டிசம்பர் 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

By Ramya sFirst Published Dec 2, 2023, 5:24 PM IST
Highlights

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிஉள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 4-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்றும், 5-ம் தேதி நெல்லை - மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக வரும் 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வரும் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 4-ம் தேதி எங்கெல்லாம் மழை பெய்யும்?

டிசம்பர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே போல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..

அதே போல் டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். எனவே 4,5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!