மசாஜ் சென்டரில் கத்திமுனையில் 2 இளம்பெண்கள் கற்பழித்த கொடூரம்... சேலத்தில் சினிமா கட்சிகளை மிஞ்சிய அவலம்!

First Published May 8, 2018, 10:45 AM IST
Highlights
massage center two young girls rape


மசாஜ் சென்டர் இரண்டு இளம் பெண்களை தனித்தனி அறைக்குள் இழுத்துச்சென்று கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, அனுமந்தபாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது  மனைவி சுபிக்ஷா. கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வரும் சுபிக்ஷா, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சினிமா நகரில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்புக புதிதாக மசாஜ் சென்டர் தொடங்கி நடத்தி வருகிறார்.

கடந்த 4ம் தேதி மாலை, இவரது மசாஜ் சென்டருக்கு ஒரு கார் மற்றும் 3 பைக்குகளில் 10 பேர் வந்தனர். திபுதிபுவென உள்ளே நுழைந்தவர்கள் உள்பக்கம் கதவை பூட்டிவிட்டு, அங்கிருந்த சுபிக்ஷா மற்றும் ஊழியரான 21 வயது இளம்பெண் ஆகிய இருவரையும் கத்திமுனையில் மிரட்டி, ரூ15 ஆயிரத்தை பறித்துள்ளனர்.

பின்னர், இருவரையும் தனித்தனி அறைக்குள் இழுத்துச்சென்று கத்திமுனையில் மிரட்டி அந்த பத்து பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அந்த அந்த மசாஜ் சென்டரை பூட்டிவிட்டு பலமுறை கற்பழித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பள்ளப்பட்டி சினிமா நகர் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு ரவுடிகள் சென்றனர். பிறகு அவர்கள் உள்பக்கமாக கதவினை பூட்டிவிட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும், ஒரு பெண்ணை அங்குள்ள அறைக்கு அழைத்து சென்று கத்திமுனையில் 3 ரவுடிகள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிய அவர்கள், கார் மற்றும் பைக்கில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பின்னர், அதாவது நேற்று முன்தினம் மாலை, பாதிக்கப்பட்ட மசாஜ் சென்டர் உரிமையாளர் ரேகா, பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான எலும்பன் கார்த்திக், அவனது கூட்டாளிகளான ரவுடி பாலகிருஷ்ணன், விஜயகுமார், விக்னேஷ், அசார் உள்ளிட்ட 10 பேர் என தெரியவந்தது.இதில், ரவுடி எலும்பன் கார்த்திக், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் 2 மசாஜ் சென்டரில் கொள்ளையடித்ததாக புகார் இதே ரவுடிக்கும்பல் கடந்த 4ம் தேதி, சேலம் காந்தி ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் புகுந்து பெண்களையும், காவலாளியையும் மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று அங்கிருந்த 2 பெண்கள், உரிமையாளர் அரவிந்த் சதீஷ் ஆகியோரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றுள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில், அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய அவர்கள், தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். சினிமாவில் வருவது போல இந்த சம்பவம் நடந்ததால் மசாஜ் சென்டர்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!