ஒரேயொரு லாரி.. தமிழகம்-கர்நாடகா போக்குவரத்து நிறுத்தம்…

By manimegalai aFirst Published Sep 21, 2021, 6:56 PM IST
Highlights

சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திம்பம் மலைப்பகுதி. 27 கொண்டை ஊசிகளுடன் கொண்ட அடர்ந்த வனப்பகுதி. தமிழகம், கர்நாடகா இடையே இந்த மலைப்பாதை முக்கிய போக்குவரத்துக்கான பாதையாகும்.

இந் நிலையில் மைசூர் பகுதியில் மரத்துண்டுகள் ஏற்றிய லாரி ஒன்று கோவைக்கு புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக வந்த போது 23வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. லாரியில் இருந்த மரத்துண்டுகள் சாலையில் சிதறி கிடைக்க, இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இறங்கினர். இந்த விபத்து காரணமாக இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து முடங்கியது.

click me!