கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த தம்பியை போடுட்டுத் தள்ளிய அக்கா … கழுத்தை நெரித்து கிணற்றில் வீசிய கொடுமை !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2018, 7:37 PM IST
Highlights

நாகர்கோவில் அருகே பெருவிளையில் கள்ளக் காதலுக்கு இடைறாக இருந்த தனது தம்பியை கள்ளக் காதலனுடன் இணைந்து கழுத்தை நெரித்து கிணற்றில் வீசிய அக்காவையும், அவரது கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நாகர்கோவிலை அடுத்த பெருவிளையை சேர்ந்தவர் நீலசாமி என்ற நீலதங்கம்.  டிரைவராக பணியாற்றி வந்த இவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து கோட்டவிளையில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நீலசாமியின் அக்காள் அமராவதி உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அமராவதியின் வீட்டுக்கு வந்து நீலசாமியை அழைத்துச் சென்ற செல்லதுரை என்பவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் அமராவதியின் கள்ளக்காதலன் என்பது தெரிய வந்தது.



அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது அமராவதியும், செல்லதுரையும்  அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்தனர். இதனை அறிந்த நீலசாமி தன்னுடைய அக்காளை கண்டித்தார்.

இதனால் அமராவதி தன்னுடைய கள்ளக்காதலனை சந்திக்க தடை ஏற்பட்டது. எனவே நீலசாமியை தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று அமராவதி நினைத்தார். இதுபற்றி தன்னுடைய கள்ளக்காதலனிடம் கூறினார். இருவரும் நீலசாமியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர்.



அதன்படி  அமராவதியின் கள்ளக்காதலன், கோட்டவிளையில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு நீலசாமியை அழைத்துச் சென்றார். அங்கு நீலசாமியை மது குடிக்க வைத்துள்ளார். போதை மயக்கத்தில் இருந்த நீலசாமியின் கைகளை, அவர் உடுத்தியிருந்த லுங்கியால் கட்டி கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். இப்படித்தான் அவர்களது திட்டம் அரங்கேறி உள்ளது.

அமராவதி, அவருடைய கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கி உள்ளதால் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!