
தமிழ் சினிமாவின் முன்னணி மாற்றுப்பாதை இயக்குனர், 'இயக்குனர் சிகரம்' பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானார். கிராமத்து மண்ணின் மணத்தையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் அசாத்தியமாகப் படைத்த அவரது மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நெருங்கிய நண்பரும், பல காவியப் பாடல்களை இணைந்து தந்தவருமான இசைஞானி இளையராஜா, பாரதிராஜாவின் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். "என் இனிய நண்பா, என்னை விட்டு எங்கே சென்றாய்? நம் நட்பு வெறும் சினிமாவோடு முடிந்தது அல்ல, அது ஆத்மார்த்தமானது. உன் மறைவு என் வாழ்வின் ஒரு பகுதியை இழந்துவிட்டதை போன்றது" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம் பாரதிராஜாவின் மறைவோடு நிறைவடைந்துள்ளது என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.