
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், மரியாதை நிமித்தமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்திக்கச் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் வீட்டின் வாசல் வரை நேரில் வந்து முதலமைச்சரை இன்முகத்துடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய்க்கு துரை வைகோ அவர்கள் மாலை அணிவித்து, பொன்னடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் வைகோவும் விஜயும் சுமூகமான முறையில் கலந்துரையாடினர்.