
புதுச்சேரி மணவெளி அறியாங்குப்பம், ஏம்பலம் மண்ணாடிபட்டு உள்ளிட்ட 30 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர்களை தன்னிச்சையாக நிறுத்துகிறது. ஆனால் இந்த வேட்பாளர்களில் மற்ற அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காதவர்கள், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை அணுகி தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்வு புதுச்சேரி ரெயின்போ நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்,மற்றும் மாநில செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். இதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக மனவெளி தொகுதி நிர்வாகி முருகன் தனக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும் உங்களுக்கு தான் சீட்டு என்று ஏமாற்றி கட்சியில் இணைத்ததாகவும், இதை நம்பி பல லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தவெக- தன்னிடம் ஆசை வார்த்தை பழிவாங்கி விட்டார்கள் ... 4 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதாக குற்றம் சாட்டு... டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...