கோவை | ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு தொழுகை ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு !

கோவை | ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு தொழுகை ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு !

Published : Mar 20, 2026, 01:02 PM IST

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்த பிறகு ஜாக் அமைப்பினர் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதன்படி சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஜாக் அமைப்பினர் புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜாக் அமைப்பினர் ரம்ஜான் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது. சரியாக ஏழு மணிக்கு தொழுகை துவங்கியது. தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இல்லங்களுக்கு செல்லும் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் உணவுகளை பரிமாறி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

04:34திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் ! தமிழிசை அதிரடி
03:04நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
04:51இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?