TN CM Vijay | அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வௌயிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகத்து வருகின்றனர்