வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்திற்கு கிடைத்துள்ள மழை அளவை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்திற்கு கிடைத்துள்ள மழை அளவை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை என்றும், பதிவான மழையின் அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் என்றும், எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் இது தள்ளிப்போனதால் மழை இல்லாமல் போனது வேண்டும் வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னையில் இயல்பைவிட 55% மழை குறைவாக பெய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது உள்ளது.