சென்னையில் நாளை 22ஆம் தேதி பள்ளி விடுமுறை இல்லை; மாணவர்கள் ஏமாற்றம்!

Published : Mar 21, 2025, 06:44 PM IST
சென்னையில் நாளை 22ஆம் தேதி பள்ளி விடுமுறை இல்லை; மாணவர்கள் ஏமாற்றம்!

சுருக்கம்

Chennai Schools: Regular Classes Tomorrow - No Holiday Declared : சென்னையில் நாளை 22ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai schools: No holiday tomorrow! Important announcement: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்காக ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரையில் அனைவரும் தயாராகி வரும் நிலையில் நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் மாணவர்களிடையே இருந்தது.

10 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் கனமழை! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்!

இதில், கோடை வெயிலின் தாக்கம் இப்போதே கடுமையாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி வேலை நாளாக அறிவித்துள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமை கால அட்டவணைப்படியே பள்ளி இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் மாவட்டந்தோறும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, தனியார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளும் நாளை 22 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவே செயல்படும். மேலும், வெள்ளிக்கிழமைக்கான கால அட்டவணைப்படியே பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை வஞ்சிப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ஆக்ஷனில் இறங்கும் அண்ணாமலை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!