கூட்டுக்குழுவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.! இந்தியாவை காக்கும்- ஸ்டாலின் அதிரடி

2026 தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை காக்க ஸ்டாலின் முயற்சி. பாதிக்கப்படும் மாநிலங்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம்.

Stalin calls for joint committee meeting tomorrow regarding constituency redistricting KAK

FAIR DELIMITATION : மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நாளை (22.3.2025) சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, ஃபேர் டீ-லிமிட்டேஷன்! இதுதான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது! திமுக ஏன் இதை பேசுபொருளாக ஆக்கியது என்றால், 2026-இல் தொகுதி மறு சீரமைப்பு கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும்! அப்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நம்முடைய எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்! இதை உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பி இருக்கிறோம்!

சித்தராமையா, ஜெகன் மோகன் ரெட்டியோடு தமிழக அமைச்சர் சந்திப்பு.! ஸ்டாலினின் அதிரடி அரசியல்

Latest Videos

நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை

இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது; நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை! அதனால் தான் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம்! பா.ஜ.க. தவிர, மற்ற அணைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்! அதில், இந்த தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவெடுத்தோம்!

அதற்காக, ஆந்திரா கர்நாடகா கேரளா தெலங்கானா ஒடிசா -மேற்கு வங்கம்-பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்களுக்கும் நாடாளுமன்றத்துல் பிரதிநிதித்துவம் இருக்கின்ற அந்த மாநிலங்களைச் சார்ந்த அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்த கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி., அடங்கிய குழு. அவர்களை நேரில் சந்தித்து கொடுத்து விளக்கம் அளித்தார்கள்.

நாளை கூட்டுக்குழு கூட்டம்

அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் நானே தொலைபேசியில் பேசினேன். இதை தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினார்கள். இந்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை மார்ச்-22 சென்னையில் நடக்க இருக்கிறது ! இப்போது எதற்கு இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று சிலர் கேட்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பால் நம் மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இருக்காது! தமிழ்நாடும் நாம் அழைத்திருக்கின்ற இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது! நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் நசுக்கப்படும்! நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியாது! இது இந்த மாநிலங்களை அவமதிக்கின்ற செயல்! எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுத்துவிட கூடாது!

தொகுதி மறுசீரமைப்பை தென்மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்? எத்தனை இடங்களை இழக்கும்? தீர்வு என்ன?

ஒரு முடிவு எடுக்கப்படும்

அதனால் தான், தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கின்ற இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது ! இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்! அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும்! நம்முடைய இந்த முன்னெடுப்பு, இந்தியாவைக் காக்கும்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

vuukle one pixel image
click me!